என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கஞ்சா விற்ற முதியவர் கைது
நீங்கள் தேடியது "கஞ்சா விற்ற முதியவர் கைது"
சங்கரன்கோவில் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்ற முதியவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் நகர் பகுதியில் அதிக அளவில் போதை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நகைகடை பஜார் பகுதியில் போலீசார் செல்லும் போது சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அவரிடம் இருந்து விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 5 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அவர் சங்கரன்கோவில் சங்குபுரம் 4-வது தெருவை சேர்ந்த குருசாமிசெட்டியார் மகன் கோவிந்தராஜ் (60) என தெரியவந்தது.
இது சம்பந்தமாக போலீசார் வழக்குபதிவு செய்து கோவிந்தராஜை கைது செய்தனர். மேலும் நகர் பகுதியில் போதை பொருள் விற்பனை பற்றிய தகவல் எதுவும் தெரிந்தால் பொதுமக்கள் உடனே டவுன் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு எழுந்துள்ளது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X